மக்கள் குறை தீர்க்கும் முகாம்... மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை... அமைச்சர் அன்பரன் உறுதி
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களின் மனுக்களை பெற்றும் நலதிட்ட உதவிகளையும் வழங்கினார் தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
தமிழ்நாடு முதலமைச்சரரும் திமுக தலைவரும்மான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுருத்தலின்பபடி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமும் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
இதில் தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று மனுக்களை பெற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்- உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் அந்தந்த ஊராட்சியில் உள்ள குறைகளை தேவைகளை தனித்தனி மனு வாகவும் தனிப்பட்ட குறைகள் பட்டா வேண்டுதல் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை மூலம் மின்சார வாரிய பிரச்சனை மற்றும் அரசு சம்பந்தப்பட்ட தண்ணீர் பிரச்சனைகளை தனித்தனி மனு வாகவும் அளித்து இந்த மாபெரும் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினர்.
அப்போது சிறப்புரையற்றிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுக்களை பரிசீலனை செய்து விரைவில் மனுக்களின் கோரிக்கையினை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், திட்ட இயக்குநேர் ஸ்ரீதேவி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட கவுன்சிலர் வனிதா மகேந்திரன்,ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யா இளமது, மற்றும் மாவட்ட ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments