மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
நெல்லை, டிச.17-
நெல்லையை போன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயும் ஒரு அதிசய கிணறு ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள். தற்போது மீன்கள் செத்து தூர்நாற்றம் வீசி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக ஏரி குளங்கள் கிணறுகள் வேகமாக நிரம்பிய நிலையில் ஒரே ஒரு கிணறு மற்றும் அதிசயமாக பார்க்கப்பட்டது காரணம் கிணற்றினுள் தண்ணீர் எவ்வளவுதான் பாய்ந்தாலும் கிணற்றில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டவில்லை இதனால் ஆச்சரியம் உடன் பொதுமக்களால் பார்க்கப்பட்டு வந்த அக்கிணற்றை சென்னையிலிருந்து ஐஐடி கல்லூரி மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் தற்பொழுது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை ஏந்தலூர் கிராமத்தில் தெற்கு தெருவைச் சேர்ந்த முருகராஜ் (63) என்னும் விவசாயி தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் நிலத்தில் விவசாயத்திற்காக அறுபத்தி ஆறு அடி ஆழம் கொண்ட கிணற்றை தோண்டி அதன் மூலம் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சி பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஏந்தல் ஊர் கிராமம் அருகே உள்ள கல்வெட்டு குளம் முழுவதுமாக நிரம்பி முருகராஜ் விவசாய நிலத்திற்குள் வெள்ளம் சூழ்ந்தது விவசாய நிலத்திற்குள் தண்ணீர் சூழ்ந்தாலும் விவசாய நிலத்தின் மையப்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் பாய்ந்து கொண்டே இருந்தது. இருப்பினும் கிணற்று நீர் பாதி அளவை தாண்டாமல் தொடர்ந்து எப்பொழுதும் இருப்பதைப் போன்றே காணப்படுகிறது.
இந்த அதிசய கிணறு தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் ஒரு ஆச்சரிய பொருளாக பார்க்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் கிணற்றில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இதனால் கிணற்றில் தூர் நாற்றம் வீசி வருகிறது. இதனிடையே செத்து கிடக்கும் மீன்களை அப்புற படுத்தும் பணியில் கிணற்றின் உரிமையாளரும் விவசாயிகளும் செய்து வருகின்றனர். அப்புறப்படுத்தும் மீன்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் இக்கிணற்றில் நேரில் பார்வையிட்டு இது உண்மையிலேயே ஒரு அதிசயம் என கூறிச் செல்கின்றனர்.
No comments
Thank you for your comments