“ஒமிக்ரான்” வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள்
வேலூர் :
கொரோனா-19 வைரஸ் உருமாற்றம் அடைந்த மற்றொரு வைரஸ் “ஒமிக்ரான்” என பெயரிடப்பட்டு தென்னாப்பிரிக்கா மற்றும் சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவும் தன்மையுடனும், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வகையிலும் உள்ளது.
இந்த உருமாற்றம் அடைந்த வைரஸினால் அதிக அளவில் அபாயம் ஏற்படக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்:-
➤ வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
➤ அதிக அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தினசரி நிர்ணயிக்கப்பட்ட லெக்கிற்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
➤ ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யும் வசதி சென்னையில் உள்ள மாநில பொதுசுகாதார ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
➤ மேற்பழ ஒமிக்ரான் வைரஸ் தாக்கினால் மருத்துவமனை சிகிச்சை மற்றும் உயிரிர்ப்பிலிருந்து கொரோனா தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது.
➤ 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த நடவழக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
➤ வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், அறைகளை காற்றோட்டமாக வைத்திருத்தல் போன்ற செயல்கள் இந்த உருமாறிய வைரஸ் பரவுவதை தடுக்கும்.
➤ பரிசோதனைஇ தொடர் கண்காணிப்புஇ மருத்துவ சிகிச்சைஇ தகுதியுள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றுதல் ஆகிய ஐந்து உத்திகளை கடைபிழக்க வேண்டும்.
➤ 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் ரெண்டுகட்ட தடுப்பூசிகளை உரிய நாட்களில் செலுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செய்தி டிவளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்
No comments
Thank you for your comments