மழையால் துண்டிக்கப்பட்ட சாலைகளை துரிதமாக சீரமைக்க நடவடிக்கை
காஞ்சிபுரம், டிச.1-
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் துண்டிக்கப்பட்ட பாலுசெட்டி சத்திரம் டூ முட்டவாக்கம், தைப்பாக்கம், பங்கார்த்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணியினை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார் ஆகியோர் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு அதனை சரி செய்ய வழிவகை செய்தார்கள்.
பின்பு திருப்புக்குழி ஊராட்சியில் ஜேசிபி எந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணியிணையும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் பி.என்.ரவி, மனோகரன், சித்திரை சுரேஷ்பாபு, சம்பத், பாலு, தமிழ், பரத், வினோத் உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments