Breaking News

வேகவதி ஆறு வெள்ள பாதிப்புகளை எம்.எல்.ஏ., எழிலரசன் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம், டிச.2-

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வட்டத்தில் வேகவதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 

தண்ணீர் சூழ்ந்த பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளும், மேலும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேரில் ஆய்வு செய்தார்.

உடன் காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகர செயலாளர் சன்பிரான்டு கே ஆறுமுகம், எஸ்.சந்துரு, சரவணன், அபுசாலி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மார்க்கண்டேயன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments