உத்திரமேரூர் ஏரி கரையில் திடீர் மண் சரிவு... எம்.எல்.ஏ., க.சுந்தர் நேரில் ஆய்வு...
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஏரி கரையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தகவல் அறிந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் நேரில் சென்று பார்வையிட்டார். சீரமைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின்போது, உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு உறுப்பினர் கெ.ஞானசேகரன் சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் டி.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்கள் சோழனூர் மா.ஏழுமலை பேரூர் கழக செயலாளர் என்.எஸ். பாரிவள்ளல் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பி.சசிகுமார் வழக்கறிஞர் ரமேஷ் பாபு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் டி.கே.கோபாலகிருஷ்ணன் நெமிலிப்பட்டு பாபு சுப்பராயன் தாமஸ் உதயசூரியன் பரணி தமிழ்செல்வன் ஆதிநாராயணன் மற்றும் பல கழக முன்னோடிகள் உடன் சென்றனர்
No comments
Thank you for your comments