Breaking News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மறுதேர்வு குறித்து சிறப்பு கூட்டம்...


கோவை:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மறுதேர்வு - மேல் நடவடிக்கை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக்தில்  உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் முதல்வர்கள் சிறப்பு கூட்டம் முனைவர் அ.சு. கிருஷ்ணமூர்த்தி, பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சமீபத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட மறுதேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து மிக விரிவாக விவாதிக்கப்பட்டு அதற்குரிய மேல்நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. 

இக்கூட்டத்தில், கல்லூரி முதல்வர்கள் அனைவரையும் மாணவர்கள் மறுதேர்வு எழுதுவதற்கு அனைத்து உதவிகளை உடனடியாக செய்து தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இக்கூட்டத்தில் முனைவர் ம. கல்யாணசுந்தரம், முதல்வர், வேளாண்மைப் கல்லூரி அவர்கள் கடந்த ஒருவாராகாலமாக பல்கலைக்கழகத்தில் இருந்த அசாதாரண சூழ்நிலைகள் பற்றியும் அதற்கு பல்கலைக்கழகம் எடுத்த உடனடி நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். 

பிறகு முனைவர் க. சூரியநாதசுந்திரம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள், இம்மறு தேர்வில் மொத்தமாக 2453 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 48 சதவீத மாணவர்கள் முறைகேடுகள் செய்ததை பல்கலைக்கழகம் கண்டுபிடித்து பல்கலைக்கழக விதிகளின் படி அவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். 

மேலும், இம்மாணவர்களுக்கு உடனடியாக பல்கலைக்கழக மறு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்ற விபரம் அடங்கிய சுற்றிக்கையை டிசம்பர் மாதம் 3ம் தேதி அன்றே அனுப்பி உள்ளதாகவும் கூறினார். 

இக்கூட்டத்தில் பேசிய உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழக தேர்வு நடைமுறைகளை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், வேளாண் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று கருத்தை ஒரு மனதாக எடுத்து கூறினர். 

மேலும், இத்தேர்வில் தோல்வியுற்ற மறுதேர்வு மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 22ம் தேதி முதல் தேர்வுகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவையில் நடத்துவதற்கு முழு சம்மதத்தை தெரிவித்ததோடு, மாணவர்களுக்கு இத்தேர்வினை எழுத அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர்.

இக்கூட்டத்தில் அனைத்து கல்லூரி முதல்வர்களும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பாடக்குறிப்புகள் உடனடியாக அளிக்கும்படியும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்து தரும்படியும் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பாக கேட்டுகொள்ளப்பட்டது. 

மாணவர்கள் மேற்படிப்பிற்கு செல்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழகமானது மாணவர்களின் விடைத்தாள்களை வெகுவிரைவாக மதிப்பீடு செய்து முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. மேலும், மாணவர்களின் தேர்வுக் கட்டணம் பற்றிய கோரிக்கையை, பல்கலைக்கழகம் கனிவோடு பரிசீலித்து, தேர்வுக் கட்டணத்தை ரூபாய் 500 லிருந்து 200 ரூபாய்க்கு குறைப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

இறுதியாக, முனைவர் அ.சு. கிருஷன்முர்த்தி, பதிவாளர் மற்றும் செயல் துணை வேந்தர் அவர்கள் அனைத்து உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரி முதல்வர்களுக்கு நன்றி கூறி மாணவர்களுக்கு உடனடியாக இக்கூட்ட முடிவுகளை எடுத்து கூறி தேர்விற்கு நன்றாக தயாராகும் வண்ணம் உதவிபுரியும்படி முதல்வர்களைக் கேட்டுக்கொண்டார்.

No comments

Thank you for your comments