Breaking News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு நிலை என்ன...? ஒமைக்ரான் முதல் நிலை அறிகுறியா..?

சென்னை:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பேட்டி அளித்துள்ளார்.

வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என தலைப்பிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார் வடிவேலு.

இந்நிலையில் அண்மையில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. 

இந்த புகைப்படங்களில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் பாடல்கள் கம்போசிங்கிற்காக வடிவேலு, டைரக்டர் சுராஜ், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் லண்டன் சென்றிருந்தனர். லண்டனில் அவர்கள் குழுவாக எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் நாடு திரும்பிய வடிவேலுவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்ததில் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடிவேலுவின் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று பேட்டி அளித்தார். 

அதில் அவர், நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் பரிசோதனை செய்ததில் இயக்குநர், தயாரிப்பாளருக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

வடிவேலுவிற்கு ஒமைக்ரான் முதல் நிலை அறிகுறி S DROP அறிகுறி இருக்கும் என்ற சந்தேகம் காரணமாக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். 

டைரக்டர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் குமரனுக்கு ஒமைக்ரான் ஆரம்ப அறிகுறி உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments