விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்
திருவள்ளூர், டிச.28-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே விவகாரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட மறுத்த மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டான்.
அய்யநேரி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணி - மங்களா தம்பதிக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. 2 மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், மனைவியிடம் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு தமிழ்மணி கேட்டதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்மணி, வீட்டிலிருந்த கத்தி ஒன்றை எடுத்து, மனைவியின் உடலில் சரமாரியாகக் குத்தியுள்ளான்.
இதில் படுகாயமடைந்த மங்களா மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த தமிழ்மணியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
👀👀👀👀👀👀
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 4 சிறுவர்கள் கைது..!
திருவள்ளூர், டிச.28-
திருவள்ளூரில் துணிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேரு சாலையில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு வந்த பரத் என்பவரை முன்விரோதம் காரணமாகப் பத்தியால் பேட்டையைச் சேர்ந்த சிறுவர்கள் 4 பேர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடைக்குள் புகுந்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த 1,000 ரூபாயை எடுத்துச் சென்றனர்.
படுகாயமடைந்த பரத் போலீசில் புகாரளித்ததன் பேரில் அந்த 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
No comments
Thank you for your comments