உலக சாதனை நிகழ்வுக்காக சிலம்பக்கலை மாணவர்களுக்கு வழியனுப்பு விழா
வேலூர்:
உலக சாதனை நிகழ்வுக்காக திருக்கோவிலூர் செல்லும் சிலம்பக்கலை மாணவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஏஜேஎஸ் சிலம்பாட்டம் குழு சார்பில் வரும் 12:12:2021 சார்பில் அன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற உள்ள சிலம்பாட்டம் ஒரே நேரத்தில் இரண்டு விதமான மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்வதற்கு செல்லும் மாணவர்களுக்கு இன்று ஏஜேஎஸ் சிலம்ப குழு மாவட்ட தலைவர் கே.பி.ஆனந்தன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஜி.குட்டி (எ) தீனதயாளன் பூஞ்சோலை எஸ்.சீனிவாசன், கஸ்தூரி தாஸ் (உபதேசர்) அவர்கள் தலைமையில் சிலம்பாட்டத்தில் கலந்து கொல்ல செல்கின்றனர்.
அவர்களை, மாஸ்டர் ஏ.எஸ்.கருணாகரன், மாஸ்டர் ஜெயவேல், மாஸ்டர் உதயகுமார் ஆகியோர் ஊக்கவித்து வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments
Thank you for your comments