முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கம்
விருதுநகர்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை விருதுநகர் மாவட்ட காவல்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடியே 10 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மதுரை, தென்காசி, கோவை, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் 8 தனிப்படையினர் ஈடுபட்டு இருப்பதாக விருதுநகர் மாவட்ட காவல்துறை தெரிவித்தது.
கே.டி. ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை விருதுநகர் மாவட்ட காவல்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments
Thank you for your comments