Breaking News

உருமாறிய ஒமிக்ரான் தொற்று 653 ஆக அதிகரிப்பு...

புதுடெல்லி:

டெல்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 653 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.  


தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 142.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 75,456 பேர் ஆகு. கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, தற்போது 0.22 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.40 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்கு பின் இது மிக அதிகமான அளவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 6,450 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,43,945 என அதிகரித்துள்ளது. 

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 61  நாட்களாக 15,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,358   பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 44 நாட்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.64 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.61 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 85 நாட்களாக 2 சதவீதத்திற்குக் கீழே 120 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,35,495 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார்  67.41 கோடி கொவிட் பரிசோதனைகள் (67,40,78,531) செய்யப்பட்டுள்ளன.

டெல்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 653 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. 

இவர்களில் 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 167 பேருக்கும், தில்லியில் 165 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 23 பேரும், மகாராஷ்டிராவில் 61 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 72,87,547 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 142.47 கோடியைக் (1,42,46,81,736) கடந்தது. 1,51,91,424 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 149.06 கோடிக்கும் மேற்பட்ட (1,49,06,76,985) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 16.80  கோடிக்கும் மேற்பட்ட (16,80,89,481) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.







No comments

Thank you for your comments