Breaking News

காஞ்சிபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் மரியாதை

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின் போது மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகர செயலாளர் சன் பிராண்ட் கே.ஆறுமுகம்,  ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், எஸ்.பி.பூபாலன், டி.குமார், நகர அவைத்தலைவர் எஸ்.சந்துரு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஏ.செங்குட்டுவன், எஸ்.கே.பி.சீனிவாசன், மாவட்ட பிரதிநிகள் எம்.எஸ்.சுகுமார், முத்துசெல்வம், சுகுமாரன்,  ஒன்றிய குழு உறுப்பினர் ராம்பிரசாத், நகர துணை செயலாளர் ஜெகன்நாதன்,அம்மன் பில்டர்ஸ் தாஸ், ஒன்றிய பொருளாளர் தசரதன், கோனேரிகுப்பம் சேகர்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, இளைஞரணி நிர்வாகிகள் யுவராஜ், அர்ஜூன், தகவல் தொழில்நுட்ப அணி அரவிந்த் குமார், எம்.எஸ்.பி.பாண்டியன், வட்ட கழக செயலாளர்கள் செந்தில், கோவிந்தராஜன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.





No comments

Thank you for your comments