உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 350 குடும்பங்களுக்கு அரசி வழங்கல்
காஞ்சிபுரம், டிச.1-
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஏழை எளிய மக்களுக்கு இன்று பகல் 1:00 மணி அளவில் சாலவாக்கம் ஒன்றியம் பினாயூர் ஊராட்சியில் 350 குடும்பங்களுக்கு 3.5 டன் அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பி.வெ.பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் பி. வெங்கடேசன் அவர்களின் ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் கா.சுந்தர் தலைமையில், ஒன்றிய கழக செயலாளர் டி. குமார் முன்னிலையில் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சிவராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பவுன்சின்ராஜ் ஒன்றிய துணை செயலாளர் விஜயாபரமசிவம், வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பொன்மொழி பன்னீர்செல்வம், கிளைக் கழக செயலாளர் எழிலரசன், வி. விசுவநாதன், உறுப்பினர்கள் எஸ்.லோகநாதன் ப.வெங்கட் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments