நன்னடத்தை பிணையை மீறிய சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 294 நாட்கள் சிறை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அதன்படி பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் அவரின் பரிந்துரையின்பேரில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி மதன்ராஜ் ( 24 ) த/பெ பாண்டியன், எண்.36, பிள்ளையார் கோயில் தெரு, சமத்துவபுரம், துலங்கும்தண்டலம், காஞ்சிபுரம் தாலுக்கா என்பவரை சட்டப்பிரிவ 110 குவிமுச - வின் படி நன்னடத்தை பிணையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் 20.09.2021 அன்று ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில் மேற்படி, மதன்ராஜ் நன்னடத்தை பிணையை மீறி 24.11.21 அன்று தனது கூட்டாளிகளுடன் சித்தேரிமேட்டைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டது காரணமாக அவர்மீது பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டு கைது செய்து அடைக்கப்பட்டார்.
வழக்கு நீதிமன்ற காவலில் இவர் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நன்னடத்தை இருந்த காலத்தை தவிர்த்து மீதமுள்ள 294 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரியை கைதுசெய்த காவல் ஆய்வாளர், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையம் மற்றும் அவரது குழுவினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
No comments
Thank you for your comments