Breaking News

சுகாதார பணியாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-2 ... வேலை வாய்ப்பு அறிவிப்பு

 நாமக்கல்:

 நாமக்கல் மாவட்ட, மாவட்ட நல சங்கம் மூலமாக இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-2 ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் நாமக்கல் மாவட்ட நல சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,  நாமக்கல் அலுவலகம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இடைநிலை சுகாதாரப் பணிக்கு 50 வயதிற்குட்பட்ட பெண்கள் செவிலியர் பட்டப்படிப்பு (DGNM)  அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing)  மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

பல்நோக்கு சுகாதாரப் பணிகள் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணிக்கு 50 வயதிற்குட்பட்ட ஆண்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்) பெற்றிருக்கவேண்டும். அத்துடன் இரண்டு வருட பல்நோக்கு பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர் /துப்புரவு ஆய்வாளர், அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள்/ காந்திகிராம் கிராமிய நிறுவனம்/ நிகர் நிலை பல்கலைகழகங்களில் இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். 

நாமக்கல் மாவட்டத்தில் காலியிடங்கள் விவரம் தேசிய நல்வாழ்வு குழுமம்    ( http://nhm.tn.gov.in/en)  வலைதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவன நகல்களுடன் மேலே குறிப்பிட்ட நாமக்கல் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திற்கு 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 


மேலும் விவரங்களை தேசிய நலவாழ்வு குழுமம் வலைதளத்திலும் தெரிந்துக்கொள்ளலாம் அல்லது நாமக்கல் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்துகொள்ளலாம். 

இந்நியமனங்கள் முழுக்க முழுக்க தற்காலிக அடிப்படையில் மட்டுமே இருக்கும். தகுதி உள்ளவர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள். 

எனவே, மேற்காணும் தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்கள் உரிய முறையில் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



No comments

Thank you for your comments