Breaking News

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு நினைவு மண்டபம் - ரூ.1.83 கோடி ஒதுக்கீடு

 ஈரோடு, டிச.28-

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சி, செலம்பகவுண்டன் பாளையத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று (28.12.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச் கிருஷ்ணனுண்ணி அவர்கள் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், தலைவர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் வீட்டுவசதி மற்றும் நகர் புறவளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்மா.மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில்  சுதந்திர போராட்டவீரர் தீரன் சின்னமலை அவர்களின் படைத் தளபதியான வீரர் பொல்லான் அவர்களின் 253-வது பிறந்தநாளையொட்டி, அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மாரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர் புறவளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

சுதந்திர போராட்டவீரர் மாவீரன் என்றும் அனைவராலும் போற்றப் படுகிறார் மாரியாதைக்கு வீர பொல்லான் அவர்களுடைய  253-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பாக அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று (28.12.2021)  நடைபெற்றது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக வீரன் பொல்லான் அவர்களுக்கு நினைவிடம் அமைப்பதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்படாத காரணத்தாலும் பொது இடத்திலே வைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதற்கான இடம் விரைவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலே அருமையான நினைவிடம் கட்டப்படும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதற்காக ரூ.1.83 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார்கள். இங்கு அனைத்து அமைப்புகளோடும் இணைந்து எங்கே நினைவிடம் அமைத்தால் சிறப்பாக இருக்கும். வருகிற மக்களுக்கும் வசதியாக இருக்கும் என்பதையெல்லாம் பார்த்து அந்த இடத்தை தேர்ந்தெடுத்து  விரைவாக அந்த பணிகள் துவங்கப் படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அமைப்பினர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் ஒற்றுமையுடனும் இருக்கிறார்கள். 

பொல்லான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு என்பது நாட்டிற்கு மிகப்பெரிய தியாகம் செய்த தியாகியாக உள்ளார். மூன்று பெரிய போலீஸ்களுடன் தீரன் சின்னமலை அவர்களோடு இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறர்கள்.

Click here to more view 👆 about LVS EYE Hospital Facility 

அதுமட்டுமல்லாது ஆங்கில அரசாங்கம் அவர்களுடைய படை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறது. என்னென்ன திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொல்லான் அவர்கள் எப்படியோ அறிந்துதான் தீரன் சின்னமலை அவர்களிடத்திலே அதை தெரிவித்து அவர்கள் இணைந்து அந்தவெற்றியை பெறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தவர் பொல்லான் அவர்கள். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொல்லான் அவர்களுக்கு உரிய மரியாதையோடு நிரந்தரமாக எத்தனை ஆண்டு காலம் ஆனாலும்  நினைவுகள் தங்கி இருக்கின்றவகையிலே இந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கருதியிருக்கிறார்கள். எனவே, அந்த வகையில் விரைவாக அதற்கான பணிகள் உருவாக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஏற்கனவே வீட்டு வசதி வாரியம் மற்றும்  நகர் புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் எந்தெந்த கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் செய்தியாளர்களிடம் தொரிவித்ததாவது, சுற்றுலாத்துறையை பொருத்தவரை மானிய கோரிக்கையின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். அந்தவகையில் தமிழகத்தில் சுமார் 10 சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் வகையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் சுற்றுலாத் தலத்திற்கான அலகு மேம்படுத்தப்படும். புதுப்புது சுற்றுலாத் தலங்களும் கண்டறியப்பட்டு, அதனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் படகு துறைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ,அதனை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களும் மேம்படுத்த விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்.நவமணிகந்தசாமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பெ.பிரேமலதா, மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரம் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments