காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற 17ம் தேதி கூடுகிறது
புதுடெல்லி:
புதிய தலைவர் ஹல்தார் தலைமையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகிற 17ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மை ஆணையத்தில் முழு நேர தலைவராக ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் புதிய தலைவர் ஹல்தார் தலைமையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகிற 17ம்தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மேகதாது அணை, காவிரி தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெறும் விசாரணை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
No comments
Thank you for your comments