காட்பாடி ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்
வேலூர், டிச.12-
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசாவை சேர்ந்த நபர் கைது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் தன்பாத் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் ரயிலின் டி-3 பெட்டியில் ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பெட்டியில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் சந்தேகத்திற்குரிய நபர் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் 13 பார்சல்களில் கட்டப்பட்ட மொத்தம் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா பார்சல்களுடன் அதை வைத்திருந்த ஒடிசா மாநிலம் பாலாங்கீர் மாவட்டம் குர்ஜாமுண்டா கிராமத்தை சேர்ந்த பாபுலால் சாஹூ என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் கஞ்சாவை ஒடிசா மாநிலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து காட்பாடி ரயில்வே போலீசார் கஞ்சாவை கடத்த முயன்ற பாபுலால் சாஹூவை கைது செய்து அவரை கஞ்சா பார்சல்களுடன் வேலூர் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
No comments
Thank you for your comments