ரூ. 1.38 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை சீரமைப்பு பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்
ஈரோடு மாநகராட்சியில் நேற்று (21.12.2021) 15வது மத்திய நிதி ஆணையத் திட்டத்தின் கீழ் ரூ. 1.38 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை சீரமைப்பு பணிகளை வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச். கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments