மத்திய அரசு .... முக்கியச் செய்திகள் தொகுப்பு
துபாய் விமான கண்காட்சி 2021-ல் இந்திய விமானப்படை பங்கேற்பு
துபாயில் இரண்டாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விமான கண்காட்சியில், இந்திய விமானப்படை விமானங்கள் பங்கேற்கின்றன.
துபாய் விமான கண்காட்சி, அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் நவம்பர் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய விமானப்படைக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அழைப்பு விடுத்தது. இதையடுத்து இதில் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் மற்றும் சாரங் சாகச குழுவினர் பங்கேற்கின்றனர். சவுதி, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாகச குழுவினருடன், இந்திய விமானப்படையும் சாகச நிகழச்சிகளில் பங்கேற்கிறது. அதோடு இந்திய விமானப்படையின் உள்நாட்டு இலகு ரக போர் விமானம் தேஜஸ் இந்த சாகச குழுவில் இணைந்துள்ளது.
இந்திய விமானப்படையின் சாரங்கு குழுவின், துருவ் ரக நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள், சூர்ய கிரண் குழுவில் இடம் பெற்றுள்ள 10 பிஏஇ ஹாக் விமானங்கள் துபாய் சென்றுள்ளன. இவற்றை கொண்டு செல்ல விமானப்படையின் ஜம்போ சரக்கு விமானம் சி-17 குளோப் மாஸ்டர் மற்றும் சி-180ஜே சூப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்கள் உதவின. துபாய் வந்த இந்திய விமானப்படை குழுவினரை, ஐக்கிய அரபு எமிரேஸ்ட் விமானப்படை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
கோவா கடல்சார் கூட்டம் - 2021 நிறைவு - கடல்சார் சிந்தனையை ஒழுங்குபடுத்துவதற்கு இந்திய கடற்படையின் முயற்சி
மூன்றாவது கோவா கடல்சார் கூட்டம் - 2021 கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வெற்றிகரமாக நடந்தது. இது இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளான வங்கதேசம், கமொரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரீசியஸ், மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர் இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் கடற்படை தலைவர்கள் மற்றும் கடல்சார் அமைப்புகளின் தலைவர்களை ஒன்றாக இணைத்தது.
"கடல்சார் பாதுகாப்பு மற்றும் பெருகிவரும் புதுவகை அச்சுறுத்தல்கள்: இந்திய பெருங்கடல் நாடுகளின் கடற்படைகளின் துடிப்பான பங்களிப்பு குறித்த ஆய்வு" எனும் தலைப்பில் இந்தாண்டின் கூட்டம் நடைபெற்றது. இந்திய பெருங்கடல் பகுதியில், அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை செயலாளர் திரு அஜய் குமார், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆக்கப்பூர்வ செயல்பாடு மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார வளம் குறித்து பேசினார். கடல்சார் பாதுகாப்புக்கான பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஐஓஎன்எஸ், ஐஓஆர்ஏ, பிம்ஸ்டெக், கொழும்பு பாதுகாப்பு கூட்டம் போன்றவை ஆற்றிய ஆக்கப்பூர்வ செயல்பாடுகளின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். வெளியுறவுத்துறை செயலாளர் திரு ஹர்ஷ் வர்தன் ஷிரிங்ளா பேசுகையில், கடல் பொருளாதாரத்தில் கடல்சார் போக்குவரத்தின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தினார். பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றத்துக்கு, கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் இடையே உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பலவிதமான ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. இதில் நிபுணர்கள், முன்னாள் கடற்படை அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் ‘மேக் இன் இந்தியா’ பாதுகாப்பு மற்றும் கப்பல் நிறுவன காட்சி கூடத்தை கடற்படை தளபதி தொடங்கி வைத்தார். இதில் பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் கப்பல் நிறுவனங்கள் தங்களை திறமைகளை வெளிப்படுத்தின. இந்திய கடற்படையின் நீர்மூழ்கி மற்றும் மீட்பு வாகனத்தின் செயல் முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இவற்றை வெளிநாட்டு கடற்படை தலைவர்கள் பார்வையிட்டனர். இந்தியாவின் கப்பல் கட்டும் திறனை வெளிப்படுத்துவதற்காக, இந்த கூட்டத்துக்கு வந்தவர்கள் ஐஎன்எஸ் கொச்சி போர்கப்பலில் அழைத்து செல்லப்பட்டனர்.
எதிர்கால கூட்டங்களிலும், அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவா கடல்சார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விமானப்படை தளபதிகள் மாநாடு நவம்பர் 2021
வருடம் இருமுறை நடைபெறும் விமானப்படை தளபதிகள் மாநாடு பாதுகாப்பு அமைச்சரால் 2021 நவம்பர் 10 அன்று விமானப்படை தலைமையகத்தில் (வாயு பவன்) தொடங்கி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பாதுகாப்பு செயலாளர் திரு ராஜ் குமார் ஆகியோரை விமானப்படைத் தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌதரி வரவேற்றார். இந்திய விமானப்படை தளபதிகளை அமைச்சருக்கு அவர் அறிமுகப்படுத்தினார்.
மாநாட்டின் தொடக்க நாளில் விமானப்படை தளபதிகளிடம் உரையாடிய அமைச்சர், உயர்மட்ட ஆயத்த நிலை, குறுகிய அவகாசத்தில் பதிலளிக்கும் திறன் மற்றும் செயல்பாட்டு மற்றும் அமைதி நேரப் பணிகளைச் செய்வதில் உயர்தர நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய விமானப்படையை பாராட்டினார்.
"நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்தல்" என்ற மாநாட்டின் கருப்பொருளை சார்ந்து சாத்தியமான தீர்வுகளை உருவாக்க ஆலோசனைகளை நடத்துமாறு தளபதிகளை அவர் அறிவுறுத்தினார்.
அனைத்து தளபதிகளிடமும் உரையாடிய விமானப்படை தலைவர், நமது எதிரிகளின் எந்தவொரு தவறான செயலுக்கும் விரைவான மற்றும் பொருத்தமான பதிலை வழங்குவதற்காக பல்-முனை திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
2021 நவம்பர் 10 முதல் 12 வரை தளபதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. ஆயுதப் படைகளுக்கு பயிற்சியளிப்பது, தயார்படுத்துவது மற்றும் விரைவான மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதை புவிசார்-அரசியல் நிலப்பரப்பில் உள்ள நிச்சயமற்ற தன்மை இன்றியமையாததாக ஆக்குகிறது.
தேசிய பாதுகாப்பை பாதிக்கக்கூடிய சூழ்நிலைகளைப் பற்றி மாநாட்டின் போது தளபதிகள் விவாதித்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்கள். பயிற்சியை வலுப்படுத்துதல் மற்றும் மனிதவளத்தை திறம்பட பயன்படுத்துவதற்கு மனிதவளக் கொள்கைகளை மேம்படுத்துதல் தொடர்பான விஷயங்களும் விவாதிக்கப்படும்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான 11-வது ராணுவ தொழில்நுட்பம் & வர்த்தக முன்முயற்சிக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது
முக்கிய சாராம்சங்கள்:
- ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கான, திருத்தப்பட்ட அறிக்கையை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன
- கடந்த கூட்டத்திற்குப் பிறகு கையெழுத்தான வான் சாதன கூட்டு நடவடிக்கைக் குழு முடிவுகளின் அடிப்படையில், ஆளில்லா விமான சாதனங்கள் தயாரிப்புக்கான முதல் திட்ட ஒப்பந்தம்
- முக்கிய தொழில்நுட்பங்கள் உருவாக்குவதை மேலும் ஊக்குவிக்க, ராணுவ தளவாட தொழில் ஒத்துழைப்பு கண்காட்சி காணொலி வாயிலாக நடத்தப்பட்டது
- ராணுவ தளவாடங்களை இணைந்து தயாரித்தல் & இணைந்து உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதே, ராணுவ தொழில்நுட்பம் & வர்த்தக முன்முயற்சிக் குழுவின் நோக்கம்
இந்தியா – அமெரிக்கா இடையிலான 11-வது ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சிக் குழுவின் கூட்டம், காணொலி வாயிலாக நவம்பர் 9, 2021 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் (ராணுவ தளவாட உற்பத்தி) திரு.ராஜ்குமார் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ராணுவ தளவாட கொள்முதல் பிரிவு துணைச் செயலாளர் திரு.க்ரிகோரி கவுஸ்னர் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.
இந்தக் குழுவின் கூட்டம், ஆண்டுக்கு இருமுறை, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம். எனினும், கொவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக இக்கூட்டம் தொடர்ந்து 2-வது முறையாக காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டுள்ளது.
தேசிய சாதனை கணக்கெடுப்பு(என்ஏஎஸ்) நாடு முழுவதும் 2021 நவம்பர் 12ம் தேதி நடைபெறவுள்ளது
மூன்று, ஐந்து, எட்டு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு 3 ஆண்டு காலத்துக்கு, மாதிரி அடிப்படையில் தேசிய சாதனை கணக்கெடுப்பு திட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் திறன்களை மதிப்பிடும் தேசிய சாதனை கணக்கெடுப்பு இதற்கு முன்பு கடைசியாக 2017ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி நடந்தது.
அடுத்த கட்ட தேசிய சாதனை கணக்கெடுப்பு நாடு முழுவதும் 2021 நவம்பர் 12ம் தேதி நடத்தப்படும். இது கொரோனா பெருந்தொற்று காலத்தில் கற்றல் தடைகள் மற்றும் புதிய கற்றல் வழிமுறைகளை மதிப்பிட்டு, தீர்வு நடவடிக்கைகளை எடுக்க உதவும். இதற்கான தேர்வு முறைகள் மற்றும் மாதிரிகளை என்சிஇஆர்டி (கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்) செய்துள்ளது. ஆனால் மாதிரி பள்ளிகளில் இந்த தேர்வை அந்தந்த மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சிபிஎஸ்இ நடத்தும். தேசிய சாதனை கணக்கெடுப்பு 2021 நடவடிக்கையில் மத்திய, மாநில அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளடங்கும். தேசிய சாதனை கணக்கெடுப்பு 2021-ல், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 733 மாவட்டங்களில் சுமார் 1.23 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 38 லட்சம் மாணவர்கள் உள்ளடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிதம், மாநில மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் ஆங்கில பாலத்தில் இந்த தேசிய சாதனை கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த தேர்வு அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கனடா, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிசோ, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, போடோ, கரோ, காசி, கொங்கனி, நோபாளி, புதியா மற்றும் லெப்சா ஆகிய மொழிகளில் நடத்தப்படும்.
தேசிய சாதனை கணக்கெடுப்பை சுமூகமாக நடத்துவதற்கு, 1,82,488 கள பரிசோதகர்கள், 1,23,729 கண்காணிப்பாளர்கள், 733 மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய சாதனை கணக்கெடுப்பை(என்ஏஎஸ்) நடத்துவதற்கு சிபிஎஸ்இ தலைவர் தலைமையில் தேசிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. என்ஏஎஸ் 2021-ஐ சுமூகமாக நடத்த https://nas.education.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அளவிலான மாநில மற்றும் மாவட்ட மதிப்பெண் முடிவுகள் இந்த இணையளத்தில் வெளியிடப்படும்.
மத்திய அமைச்சர் ஆனபின், கேரளாவுக்கு முதல் முறையாக ராஜீவ் சந்திரசேகர் அரசுமுறைப் பயணம்
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, திறன் மேம்பாடு மற்றும் தொலைமுனைவுத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திர சேகர் கேரளாவில் நாளை முதல் நவம்பர் 13ம் தேதி வரை, 3 நாள் அரசு முறையப் பயணம் மேற்கொள்கிறார். திரு நரேந்திர மோடி அமைச்சரவையில் சேர்ந்தபின் இவர் முதல் முறையாக சொந்த மாநிலமான கேரளாவுக்கு வருகிறார்.
கேரளாவில் இவர் முதன் முதலாக செல்போன் நெட்வொர்க் கட்டமைப்பை ஏற்படுத்தியவர் மற்றும் மீனவர்கள் இடையே வயர்லெஸ் நெட்வொர்க்கையும் ஏற்படுத்தினார். இதன் காரணமாக மீனவர்களின் வருவாய் அதிகரித்தது.
நாளை முதல் கேரளாவில் 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கொச்சியில் உள்ள டிஆர்டிஓ கடற்படை ஆய்வு மையத்தை பார்வையிடுகிறார். அங்கு அவருக்கு ஆய்வகத்தின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
இந்தியாவில் துடிப்பான தொடக்க நிறுவனங்களை உருவாக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்கு குறித்து, தொடக்க நிறுவனங்களுடன் அவர் பகிர்ந்து கொள்கிறார். கொச்சியில் உள்ள கின்ப்ரா ஹைடெக் பூங்காவை 12ம் தேதி பார்வையிட்டு, தொழில்முனைவோர்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
நவம்பர் 13ம் தேதி அன்று, திருவனந்தபுரத்தில் மீன் ஆராய்ச்சி மையம் மற்றும் சிடிஏசி தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றையும் பார்வையிட்டு, தற்சார்பு இந்தியா தொலைநோக்கு குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். புதிய சைபர் தடையவியல் மையம் மற்றும் டிஜிட்டல் தடையவியல் மையம் மற்றும் நீர்மூழ்கி ட்ரோன் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
எர்ணாகுளத்தில் ஜன் சிக்ஷா சன்ஸ்தான், திருவனந்தபுரத்தில் தேசிய திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் ஆகியவற்றையும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிடுகிறார். பயனாளிகளை சந்தித்து பேசும் அவர், தனது அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறுகிறார்.
2025-ம் ஆண்டிற்குள் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உத்திகள் குறித்த கூட்டத்திற்கு டாக்டர் பாரதி பிரவின் பவார் தலைமை வகித்தார்
காசநோயை 2025-ம் ஆண்டிற்குள் ஒழிப்பதற்கான உத்திகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இன்று தலைமை வகித்தார்.
2025-க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் பவார், “நாட்டில் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடுவுக்கு இன்னும் 37 மாதங்கள் மட்டுமே உள்ளன. கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்வதற்கும் அதற்கு அப்பால் செல்லவும் புதுமையான தீர்வுகளை நாம் கொண்டு வர வேண்டும்,” என்றார்.
காசநோயை ஒழிப்பதில் இந்தியாவின் உறுதி குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர், “இலவச விரைவு மூலக்கூறு கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான அணுகலை பெருந்தொற்றுக்கு இடையிலும் நாம் மேம்படுத்தினோம். காசநோயாளிகளுக்கு நிதி மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு தடையின்றி தொடர்ந்தது. சரியான நேரத்தில் கண்டறிதல், சிகிச்சையைப் பின்பற்றுதல் மற்றும் விளைவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வழிவகுத்தன,” என்றார்.

மேலும் பேசிய அவர், “சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் உடனடி சிகிச்சை ஆகியவை காசநோயை போக்குவதற்கு முக்கியமாக அம்சங்களாக இருப்பதால், காசநோய் பராமரிப்பு மற்றும் தடுப்பு சேவைகளை விரைவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேசிய திட்டத்தில் "தடுப்பு" என்ற பிரிவின் கீழ் காசநோய் தடுப்பு சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

காசநோய் ஒழிப்புக்கான மத்திய அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த அவர், “விரிவான ஆரம்ப சுகாதார பராமரிப்பின் இன்றியமையாத பகுதியாக காசநோய் தற்போது மாற்றப்பட்டுள்ளதோடு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சமூதாயம் உட்பட பல்வேறு பங்குதாரர்களின் ஈடுபாட்டின் மூலம் காசநோய் சிகிச்சையை விரிவுபடுத்துவதன் வாயிலாக பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, புதிய காசநோய் தொற்றுகள் தோன்றுவதைத் தடுப்பதே எங்கள் நோக்கம். இதையொட்டி நாடு முழுவதும் காசநோய் இல்லா இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது,” என்றார்.
புதிய காசநோய் எதிர்ப்பு மருந்துகள், புதிய விதிமுறைகள் மற்றும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்ட டாக்டர் பாரதி பிரவின் பவார், காசநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளைப் பாராட்டினார்.
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 109.63 கோடியைக் கடந்தது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 52,69,137 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 109.63 கோடியைக் (1,09,63,59,208) கடந்தது. 1,11,61,268 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,961 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,37,87,047 ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.25 சதவீதமாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 136 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,39,683 ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.41 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 12,78,728 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. கடந்த 264 நாட்களில் இதுவே குறைவாகும். கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் தற்போது 0.41 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
இதுவரை சுமார் 61.85 கோடி கொவிட் பரிசோதனைகள் (61,85,02,659) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 47 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.20 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.90 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 72 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 37 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 118 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 118 கோடிக்கும் மேற்பட்ட (1,18,24,36,185) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 16.13 கோடிக்கும் மேற்பட்ட (16,13,69,661) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
கொவிட்-19 அண்மைத் தகவல்
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 109.63 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. .
கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.25 சதவீதம். 2020 மார்ச் மாதத்தில் இருந்து இதுவே அதிகமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 11,961 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,37,87,047 என அதிகரித்துள்ளது.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.41 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,39,683; கடந்த 264 நாட்களில் இதுவே குறைவானதாகும்
தினசரி பாதிப்பு விகிதம் 0.90 ஆகும். கடந்த 37 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
வாராந்திர பாதிப்பு விகிதம் 1.20 கடந்த 47 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 61.85 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
பத்மஸ்ரீ விருது பெற்ற அதன் அதிகாரியான மௌமா தாஸுக்கு ஆயில் இந்தியா நிறுவனம் பாராட்டு
பிரபல டேபிள் டென்னிஸ் வீரரும் ஆயில் இந்தியா லிமிடெட் அதிகாரியுமான மௌமா தாஸை அவரது சிறந்த சாதனைகளுக்காகவும், பத்மஸ்ரீ விருது பெற்றதற்காகவும் நேற்று நொய்டாவில் உள்ள அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் அந்நிறுவனம் கௌரவித்தது.
விளையாட்டுத் துறையில் அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் மௌமா தாஸுக்கு குடியரசுத் தலைவரால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு எஸ்.சி மிஸ்ரா, மூத்த அதிகாரிகள் முன்னிலையில் மௌமா தாஸை பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், திருமதி தாஸின் சாதனைகளுக்கு திரு மிஸ்ரா வாழ்த்து தெரிவித்ததோடு, ரூ 6 லட்சத்திற்கான காசோலையையும் அவருக்கு வழங்கினார். திருமதி தாஸ் 1999-ம் ஆண்டு முதல் ஆயில் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது அதன் கொல்கத்தா அலுவலகத்தில் மேலாளராக (சிறப்பு பணி அலுவலர்) பணியாற்றுகிறார்.
டேபிள் டென்னிஸில் தனது சிறப்பான பங்களிப்பிற்காக 2013-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும் திருமதி தாஸ் பெற்றுள்ளார். ஏதென்ஸ் 2004 மற்றும் ரியோ 2016 ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் போட்டிகள், காமன்வெல்த் சாம்பியன்ஷிப், உலக சாம்பியன்ஷிப் மற்றும் பல தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் மௌமா தாஸ் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளார். 1997 முதல் 17 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். இது வேறெந்த இந்திய வீராங்கனையும் இது வரை செய்யாத சாதனை ஆகும்.
அறிவியல் பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்காக 33 அமைச்சகங்கள்/துறைகளிடமிருந்து 134 முன்மொழிவுகள்/தேவைகள் பெறப்பட்டன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
அறிவியல் பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்காக 33 அமைச்சகங்கள்/துறைகளிடமிருந்து 134 முன்மொழிவுகள்/தேவைகள் பெறப்பட்டன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். இதற்கான ஒருங்கிணைப்பை சிஎஸ்ஐஆர் செய்திருந்தது.
இன்று நடைபெற்ற அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மூன்றாவது கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், துறைகளுக்கான பல்வேறு அறிவியல் பயன்பாடுகளைப் உபயோகப்படுத்துவதற்காக செப்டம்பரில் தொடங்கப்பட்ட முன்முயற்சியின் விளைவாக இரண்டு மாதங்களுக்குள் அமைச்சகங்களிடமிருந்து இவ்வளவு பெரிய அளவிலான பரிந்துரைகள் பெறப்பட்டதற்கு திருப்தி தெரிவித்தார்.
விவசாயம், உணவு, கல்வி, திறன் மேம்பாடு, ரயில்வே, சாலைகள், ஜல் சக்தி, மின்சாரம் மற்றும் நிலக்கரி போன்ற துறைகள் இதில் அடங்கும். இன்று ஒவ்வொரு துறையும் அறிவியல் தொழில்நுட்பத்தையே பெரிதும் நம்பியிருப்பதை இது காட்டுகிறது என்றார் அவர்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், அணுசக்தி, விண்வெளி/இஸ்ரோ, சிஎஸ்ஐஆர் மற்றும் பயோடெக்னாலஜி உள்ளிட்ட அனைத்து அறிவியல் அமைச்சகங்களின் பிரதிநிதிகள் தனித்தனியாக ஒவ்வொரு அமைச்சகத்துடனும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள இந்த புதிய முயற்சியை டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கினார்.
இந்திய அரசில் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் எந்தெந்த துறைகளில் என்னென்ன அறிவியல் பயன்பாடுகளைப் உபயோகப்படுத்தலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பிட்ட அமைச்சக அடிப்படையிலான அல்லது துறை சார்ந்த திட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த கருப்பொருள் அடிப்படையிலான திட்டங்களின் அவசியத்தை அமைச்சர் அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இந்த வித்தியாசமான யோசனையை பிரதமர் திரு நரேந்திர மோடி பரிந்துரைத்தார் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் அறிவியலின் மீது இயற்கையான விருப்பம் கொண்டவர் மட்டுமல்ல, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஆதரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் என்றார்.
விவசாயிகளுக்கு நேரடி ஆதரவு அளிப்பதற்காக 2014-15 முதல் 2020-21 வரை இந்திய பருத்தி நிறுவனத்திற்கு ரூ 17,408 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை நிதி
தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதை நோக்கிய மற்றுமொரு நடவடிக்கையாக, விவசாயிகளுக்கு நேரடி ஆதரவு அளிப்பதற்காக 2014-15 முதல் 2020-21 வரை இந்திய பருத்தி நிறுவனத்திற்கு (சிசிஐ) ரூ 17,408 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை நிதிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாக திகழும் பருத்தி, சுமார் 58 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், சுமார் 400-500 லட்சம் பேர் பருத்தி பதப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் போன்ற தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
2020-21 பருத்தி பருவத்தில், பருத்தி சாகுபடியின் பரப்பளவு 133 லட்சம் ஹெக்டேராக இருந்தது, 360 லட்சம் பேல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மொத்த உலகளாவிய பருத்தி உற்பத்தியில் இது 25% ஆகும்.
கடந்த இரண்டு பருத்தி பருவங்களில் (2019-20, 2020-21) காணப்பட்ட உலகளாவிய பெருந்தொற்றின் போது, நாட்டின் பருத்தி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது சுமார் 200 லட்சம் பேல்களை சிசிஐ கொள்முதல் செய்து ரூ.55,000 கோடிக்கு மேல் சுமார் 40 லட்சம் பருத்தி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தியுள்ளது.
தற்போதைய பருத்தி பருவத்தில் (அதாவது அக்டோபர் 2021- செப்டம்பர் 2022), 143 மாவட்டங்களில் 474 கொள்முதல் மையங்களைத் திறப்பதன் மூலம், அனைத்து 11 பெரிய பருத்தி வளரும் மாநிலங்களிலும் போதுமான ஏற்பாடுகளை சிசிஐ ஏற்கனவே செய்துள்ளது. பருத்தியில் குறைந்தபட்ச ஆதரவு செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக சிசிஐ-க்கு அரசு முழு விலை ஆதரவை வழங்குகிறது.
இந்திய பருத்தி ஆணையத்திற்கு (சிசிஐ) 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு ரூ.17,408.85 கோடி விலை ஆதரவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு, இந்திய பருத்தி ஆணையத்திற்கு (சிசிஐ) ரூ.17,408.85 கோடிக்கான உறுதியான விலை ஆதரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (30.09.2021 வரை).
பருத்தி விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பருத்தியின் விலை ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானது என்பதால், 2014-15 முதல் 2020-21 வரையிலான பருத்தி பருவங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அமலாக்கம், நாட்டின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் பருத்தி விவசாயிகளை உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்துகிறது. விலை ஆதரவு நடவடிக்கைகள் பருத்தி விலையை நிலைப்படுத்தவும் விவசாயிகளின் துயரத்தைப் போக்கவும் உதவுகின்றன.
பருத்தி மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாகும் என்பதோடு, சுமார் 58 லட்சம் பருத்தி விவசாயிகள், பருத்தி பதப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் போன்ற பருத்தி தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 400 முதல் 500 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பருத்தி பருவம் 2020-21 இல், பருத்தி சாகுபடியின் பரப்பளவு 133 லட்சம் ஹெக்டேராக இருந்ததுடன், 360 லட்சம் பொதிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உலகளாவிய பருத்தி உற்பத்தியில் 25% ஆகும். விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய அரசு விதை பருத்திக்கு (கபாஸ்) குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசு, பருத்தி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை, மத்திய நோடல் ஏஜென்சியாக நியமித்ததுடன், குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டத்திற்கு கீழே பருத்தி விலை குறையும் போது, அனைத்து நியாயமான சராசரி தரம் (FAQ) பருத்தியையும் விவசாயிகளிடமிருந்து எந்தவித தர அளவும் இல்லாமல் கொள்முதல் செய்வதன் மூலம், பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்திய பருத்தி கார்ப்பரேஷன் லிமிடெட் பொறுப்பேற்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கைகள் பருத்தி விவசாயிகளை எந்தவொரு துயரமான விலைச் சூழ்நிலையிலும் பாதகமான விற்பனையிலிருந்து பாதுகாக்கின்றன.
குறைந்தபட்ச ஆதரவு விலை செயல்பாடுகள், இயற்கையில் இறையாண்மையாக செயல்படுவதுடன், தற்சார்பு இந்தியாவுக்கு உதவி செய்யும் வகையில், நூற்புத் தொழிலுக்கான மூலப்பொருளான தரமான பருத்திக்காக, பருத்தி சாகுபடியில் அவர்களுடைய ஆர்வத்தை நிலையாக தக்கவைக்க, நாட்டின் பருத்தி விவசாயிகளை ஊக்குவிக்கிறது. பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், அதன் உள்கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருப்பதால், பருத்தி வளரும் பெரிய 11 மாநிலங்களில், 143 மாவட்டங்களில் 474 கொள்முதல் மையங்களைத் திறக்கிறது.
உலகளாவிய தொற்றுநோய் நெருக்கடி காலங்களில், கடந்த இரண்டு பருத்தி பருவங்களில் (2019-20 மற்றும் 2020-21), CCI நாட்டின் பருத்தி உற்பத்தியில் 1/3ல் அதாவது, சுமார் 200 லட்சம் பேல்களை கொள்முதல் செய்து ரூ.55,000/- கோடிக்கு மேல் 40 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைத்தது.
தற்போதைய பருத்தி பருவத்தில் அதாவது 2021-022, CCI ஆனது 11 பெரிய பருத்தி வளரும் மாநிலங்களிலும் 450 க்கும் மேற்பட்ட கொள்முதல் மையங்களில் மனித ஆற்றலைப் பயன்படுத்துதல் உட்பட, குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கைகளின் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க போதுமான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்துள்ளது.
*******
No comments
Thank you for your comments