சிறுவர் சிறுமியர் காப்பகம் நடத்தி வருபவர் சிறுமிகளிடம் பாலியல்: போஸ்கோ சட்டத்தில் கைது

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வீரரெட்டிகுப்பத்தில் அமலா சிறுவர் சிறுமியர் இல்லம் நடத்தி வருபவர் சவரிமுத்து மகன் ஜேசுதாஸ்ராஜா ( வயது -65 ) சிறுவர்  காப்பகத்திலிருந்து மூன்று பெண் குழந்தைகளை விருத்தாசலம் அடுத்த வீரரெட்டிகுப்பத்தில் உள்ள ஜேசுதாஸ்ராஜா-வுக்கு சொந்தமான சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பயில்வதற்க்காக சேர்த்தனர்.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மூன்று சிறுமிகள் காணாமல் போன வழக்கில் சிறுமிகளை கண்டுபிடித்துக்



கொடுக்குமாறு காப்பபகத்தின் தாளாளர் ஜேசுதாஸ் ராஜா காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். 

இந்த புகாரின் மீது விசாரணை செய்ததில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் ரித்திகா, பூஜா, சோனியா ஆகிய மூவரையும் கண்டுபித்து விசாரணை செய்ததில் எங்களை பாலியல் சீண்டல் செய்ததாக சிறுமிகள் கூறியதையடுத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு இவ்வழக்கில்  கைது செய்து, விசாரணைக்காக ஆலடி காவல் நிலையத்தில் வைத்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர்கள் பரந்தாமன், ஆதி, பொட்டா ஆகியோர் தீவிர விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இவர்மீது ஏற்கனவே பல ஆண்டுகளாக இவரது காப்பக சிறுமிகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் அந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளை சிபிசிஐடி கொண்டு விசாரணை செய்தால் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

No comments

Thank you for your comments