மழை நீர் சூழ்ந்த மலைவாழ் மக்கள் பகுதியை நேரில் ஆய்வு செய்தார் மதுராந்தகம் சட்ட மன்ற உறுப்பினர்
மதுராந்தகம் தொகுதி, அச்சிருப்பாக்கம் ஒன்றியம் மின்னல் சித்தாமூர் ஊராட்சி, கீழ்பட்டு கிராம மலைவாழ் மக்களின் வீடுகளில் மழை நீர் சூழ்ந்த நிலையில் இன்று மதுராந்தகம் சட்ட மன்ற உறுப்பினர் திருமதி K. மரகதம் குமரவேல் MA.MLA.Ex.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் அவர்கள் அப்பகுதி மக்களை பாதுகாப்பான பகுதியில் தங்கவைத்து உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்..
மேலும் இனிவரும் மழைகாலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆலோசனை கூறினார்..
பின்பு அரசு அதிகாரிகளிடம் மருத்துவம் மற்றும் முன் ஏற்பாட்டு பணிகளை துரித படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்...
இந்நிகழ்வின் போது அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு அனந்தமங்களம் சுப்ரமணியம் அவர்கள், கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன் பிறப்புக்கள் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments