Breaking News

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், நவ.11-

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில மையம் (TNROA) முடிவின்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர்  ஜி. ரமேஷ் தலைமையில் நேற்று (10.11.2021) மாலை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில மையம்  (TNROA) முடிவின்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (10.11.2021) மாலை 05.45 மணியளவில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்காதது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செலவின தொகையை வழங்காதது மற்றும் எரிபொருள் செலவை வழங்காதது ஆகியவை குறித்து நடைபெற உள்ள தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 முகாம் பணிகளை புறக்கணிப்பது தொடர்பாக மாவட்ட தலைவர்  ஜி. ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இதில் மாவட்ட துணை தலைவர் தனசேகரன், மாவட்ட இணை செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தோழர்கள் எழுச்சியோடு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments