Breaking News

குடியிருப்புகளில் தேங்கியுள்ள வெள்ள நீர் வெளியேற்றம்... பாதித்த மக்களுக்கு திமுகவினர் உதவி வழங்கல்...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள வேகவதி ஆற்றில் நேற்று இரவு முதல் அதிக நீர் வர ஆரம்பித்தது. இக்கரையோரம் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.



இந்நிலையில் இதை அறிந்த பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொண்டும் இது குறித்து உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நகராட்சி ஊழியர்கள்  அப்பகுதியில் இருந்த சிறு பாலத்தினை ஜேசிபி உதவியுடன் உடைக்கப்பட்டு நீர் வெளியேற வழி வகை செய்யப்பட்டது.

இந்நிலையில் நீர் வெளியேற்றும் பணியினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்- உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்  மற்றும் மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் அப்பகுதிகளைப் பார்வையிட்டும் , அப்பகுதியில் சூழ்ந்து உள்ள நீரை விரைவாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.



மேலும் அப்பகுதி மக்கள் தங்கியுள்ள  பகுதிகளில் அனைவருக்கும்  மதிய உணவு வழங்கினர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் நகரசெயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் , மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், நகர அவைத்தலைவர் சந்துரு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், நகர துணை செயலாளர் ஜெகன்னாதர்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், டாக்டர் சோபன் குமார், யுவராஜ், மலர்மன்னன், தசரதன், அபுசாலி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


No comments

Thank you for your comments