கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி பறிமுதல்
அரூர், நவ.10:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி அருகேயுள்ள சேலூர் கிராமத்தில் உரிமம் பெறாத நாட்டுப் துப்பாக்கிகளை சிலர் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அரூர் டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா உத்தரவின்படி, உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலூரில் புளிய மரத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஒரு நாட்டுத் துப்பாகியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து அ.பள்ளிப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
No comments
Thank you for your comments