புயல் மழையினால் பாதிக்கப்பட்ட இருளர் மற்றும் குறவர் இனமக்களுக்கு நல உதவி
காஞ்சிபுரம்:
பல்வேறு இடங்களில் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட இருளர் மற்றும் குறவர் இனமக்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் G.செல்வம் அவர்களும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்.
உடன் உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவரும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளருமான ஹேமலதா ஞானசேகரன் மற்றும் ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான வசந்திகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் G.சிவராமன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments