Breaking News

பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை! - அன்பில் மகேஷ்

காஞ்சிபுரம்:

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போஸ்கோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்   தெரிவித்துள்ளார்.

காஞ்சிபெருநகர் மாதிரி பள்ளியில் ஆய்வகத்தை திறந்துவைத்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளரிடம் கூறியதாவது

நவம்பர் செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் பள்ளிகள் தொடங்கப்பட்டன என்ற காரணத்தினால் மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் அடைய கூடாது என்பதை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள்  குறைக்கப்பட்டன.

ஜனவரி மாதத்தில் மாதிரித் தேர்வுகள் நடைபெற்று வழக்கம்போல் பொது தேர்வானது மார்ச் இறுதியில்  ஏப்ரல் தொடக்கத்தில் நடைபெறும்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போஸ்கோ சட்டம் குறித்து போதிய அளவு விழிப்புணர்வு உள்ளது.

அதே விழிப்புணர்வு தனியார் பள்ளி ஆசிரியரிடமும் அதிகரிக்க வேண்டும் தனியார் பள்ளியில் பாலியல் தொடர்பான பிரச்சினை இருந்தால் அதை மறைக்காமல் உடனடியாக அரசு கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

அப்போதுதான் மூடி மறைக்காமல் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள் என்று அந்த பள்ளியின் மீது பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 35 சதவீதத்தில் இருந்து 55 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.



பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு முக்கியமானதோ, தேவையோ அதில் எதுவுமே குறைக்கவில்லை மாணவர்களுக்கு அதி முக்கியமாக இது தெரிய வேண்டுமோ அது கண்டிப்பாக இருக்கும் என்றார்.

No comments

Thank you for your comments