Breaking News

மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடத்த வலியுறுத்தல்

 சென்னை

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை மே மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை விவரம்:

மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் பாடத்திட்டங்களை குறைக்கப்படாது என்றும் கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் அறிவிப்பு மாணவ, மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர , மாணவ., மாணவியர் மன நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது, பாடத்திட்டங்களை குறைத்து பொதுத்தேர்வு மே மாதத்திற்கு தள்ளி வைக்கவேண்டும் என்பதே மாணவ. மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது,

எனவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையி்ட்டு கொரோனா தொற்றுநோய் பாதிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு  ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொடர்புடையவர்களை அழைத்து பேசி மாணவர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



No comments

Thank you for your comments