தமிழகத்தில் கனமழைக்கு 5 பேர் பலி.... 538 குடிசைகள் சேதம்...
சென்னை :
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டிய கனமழைக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். 538 குடிசைகள் நாசமாகி உள்ளன. 4 வீடுகள் இடிந்து விழுந்து விட்டன என்று மாநில பேரிடர் நிர்வாக அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்திற்கு மத்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது வானிலை எச்சரிக்கை அறிவிப்பின்படி தமிழகத்தில் தொடர்ந்து கனமழை கொட்டும். ஆனால் உயிர்சேதம், வெள்ளப்பெருக்கு, வீடுகள் சேதம், குடிசைகள் சேதம் ஆகியவை அதிகரிக்கக்கூடும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி 12 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் அத்துடன் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மையம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் வடக்குப் பகுதி நோக்கி நகரக் கூடும் என்றும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்நிலை தமிழகத்தின் வடக்கு கடற்கரையை நெருங்கும் பொழுது மிக அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் 20 சென்டி மீட்டருக்கு மேல் கன மழை பெய்யலாம் அத்துடன் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
புயல் காற்று சுழற்சி தற்பொழுது தென்கிழக்கு வங்கக் கடல். தெற்கு அந்தமான் கடல் உள்ளது. அடுத்த பனிரெண்டு மணி நேரத்திற்குள் புயல் காற்றாக உருவாகக் கூடும்.
காவிரியில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதாலும் மேட்டூர் அணை கொள்ளளவு 119 அடியாக உயர்ந்து இருப்பதாலும் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சென்னையில் குடிநீர் தேக்கத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குடி நீர்த்தேக்கம் 270 கோடி கன அடி தண்ணீர் கொள்ளளவு உள்ளது. 34.58 ச.கி.மீ பரப்பளவு உள்ளதாகும். குடிநீர் திட்டத்துக்கு வினாடிக்கு 3226 கன அடி தண்ணீர் வந்து சேருகிறது.
நவ.10, 11ம் தேதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் இப்பொழுது வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments