ஓரிக்கை பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
காஞ்சிபுரம்:
திமு கழக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் 48வது வார்டுக்குட்பட்ட 3 இடங்களில் கழக கொடி ஏற்றி 300 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினார் திமுக நிர்வாகிகள் அம்மன் பில்டர்ஸ் எஸ். தாஸ் மற்றும் எஸ்.தில்லிபாபு.
இந்நிகழ்வில் நகர மாணவரணி துணை அமைப்பாளர் கீர்த்திவாசன், வட்ட கழக நிர்வாகிகள் சந்திரசேகர், இளங்கோ, இலக்கிய அணி சங்கர் மற்றும் திமுகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
No comments
Thank you for your comments