Breaking News

உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளுவர் குருகுலம் உணவு வழங்கல்

காஞ்சிபுரம்: 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரம் ராஜகோபால் தெருவில் உள்ள திருவள்ளுவர் குருகுலம் ஆதரவற்ற பெண்களுக்கான இல்லத்தில்   உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் காஞ்சி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதனை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் குழந்தைகளுடன் மாணவியை அழைத்து கேக் வெட்டி உணவு பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

மேலும்  இந்நிகழ்வில்  காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , நகர செயலாளர் சன் பிராண்ட். கே.  ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர அவைத்தலைவர் சந்துரு ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார்,பூபாலன், எஸ் கே பி சீனிவாசன்,மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார்,நகர துணை செயலாளர் ஜெகன்நாதன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments