பஞ்சு, கழிவு பஞ்சு மீதான 1% வரி ரத்து – முதலமைச்சருக்கு தென்னிந்திய ஆலைகள் சங்கத் தலைவர் நன்றி தெரிவித்தனர்
கோவை:
பஞ்சு, கழிவு பஞ்சு மீதான 1% வரியை ரத்து செய்ததற்காக, தென்னிந்திய ஆலைகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் இன்று கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தொழில்முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினையேற்று பஞ்சு, கழிவு பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரியை (சந்தைக் கட்டணம்) ரத்து செய்ததற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர் ரவிசாம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி உடனிருந்தார்.
No comments
Thank you for your comments