கோவில் உட்பட நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த கட்டடங்கள் இடிப்பு... 125 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் மீட்பு
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட கிராமத்தில் ஓடை பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை பல வருடங்களாக பல நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர் அந்த இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோவில் உணவக தொழிற்சாலை தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் என இருந்து வந்தது.
இது அனைத்தும் நீர்நிலை பகுதியில் இருந்த காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தை முழுவதுமாக மீட்டுள்ளனர்.
மேலும் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு விதிமீறி ஆய்வு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்தனர் இதன் மதிப்பு சுமார் 125 கோடி ரூபாய் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது தற்போது பெய்த தொடர் கனமழை சென்னை புறநகர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மிதந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு முழு காரணம் நீர் வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களையும், நீர் வழிப் பாதையில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன் நடவடிக்கையாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நீர் வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 125 கோடி மதிப்புடைய நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது
No comments
Thank you for your comments