Breaking News

ரூ.500க்கு மனைவியை விற்ற கணவன்! - அதிர்ச்சி சம்பவம்...

குஜராத்:

 இந்தியாவில் தாலி கட்டிய மனைவியை ரூ.500க்கு விற்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தான் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக போலிஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா கூறுகையில், 21 வயதான இளம்பெண் எங்களிடம் வந்து ஒரு புகாரை கொடுத்தார்.

அதில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 9 மணிக்கு லக்கி ஹோட்டலுக்கு நானும் என் கணவரும் சென்றோம். அப்போது அங்கு வந்த நபர் என் கணவரிடம் ரூ 500 கொடுத்தார், இதையடுத்து என்னை அந்த நபருக்கு விற்றுவிட்டார். பின்னர் அவர் என்னை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று சீரழித்தார் என தெரிவித்துள்ளார். புகாரையடுத்து குற்றவாளியான சோனு சர்மாவை போலிசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இச்சம்பவத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Thank you for your comments