காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பி.நடராஜன் பொறுப்பு ஏற்பு
காஞ்சிபுரம், அக். 27 -
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பி.நடராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த அருள் செல்வம் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பி.நடராஜன் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பி.நடராஜன் பொறுப்பேற்றுக் கொண்டு, சில கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.
இவருக்கு, மாவட்டத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களான பீம்குமார் உள்ளிட்ட பலர் நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள் நிலை என்ன? 👆🔔👍
No comments
Thank you for your comments