சமந்தா - நாக சைத்தன்யா பிரிவு குறித்து நடிகர் நாகார்ஜூனா உருக்கம்!
சமந்தா, நாக சைத்தன்யா பிரிவு குறித்து நடிகரும் நாகசைத்தன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் ஒத்த மனத்துடன் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதற்கிடையில், நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்தன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாதத்தில் சமூக வலைதளத்தில் அவருடைய பெயரை மாற்றினார். திருமணத்துக்குப் பிறகு கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்துக் கொண்டவர், ஜூலை மாதத்தில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆங்கிலத்தில் 'எஸ்' என்று பெயரை மாற்றினார்.
சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் பிரிகிறார்கள் என்று ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தன.
இருவரும் இச்செய்திகளை மறுக்காத நிலையில், நேற்று திடீரென இருவரும் தங்களின் பிரிவை சமூக வலைத்தளங்கள் வாயிலாக உறுதிப்படுத்தினர். இது ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே சமந்தா, நாக சைத்தன்யா பிரிவு குறித்து நாகார்ஜூனா வெளியிட்டிருக்கும் பதிவில்,
கனத்த இதயத்துடன், இதைச் சொல்கிறேன்! சாமுக்கும் (சமந்தா) சாய்க்கும் (நாக சைத்தன்யா) இடையில் என்ன நடந்தாலும் அது மிகவும் துரதிருஷ்டவசமானது. மனைவிக்கும் கணவனுக்கும் இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். இருவரும் எனக்கு அன்பானவர்கள்.
சமந்தாவுடன் செலவழித்த தருணங்களை என் குடும்பத்தினர் எப்போதும் போற்றுவார்கள், அவள் எப்போதும் எங்களுக்கு அன்பாக இருப்பாள்! கடவுள் அவர்கள் இருவரையும் பலத்துடன் ஆசீர்வதிப்பாராக!” இவ்வாறு நாகார்ஜூனா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2021
No comments
Thank you for your comments