Breaking News

முருகேசன்- கண்ணகி ஆணவ படுகொலை வழக்கில் தீர்ப்பு... கலவரத்தை உண்டு பண்ணும் வன்னியர் சமூகத்தினர்

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த  முருகேசன்- கண்ணகி ஆணவ படுகொலை வழக்கில் தீர்ப்பை ஒரே சமூகத்திற்குள் கலவரத்தை உண்டு பண்ணும் வன்னியர் சமூகத்தினர்... 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு இவரது மகன் முருகேசன் என்பவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆணவப்படுகொலை செய்துவிட்டார்கள் அவர்களுக்கு நீதி மன்றம் தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியுள்ளது 

இந்நிலையில் இதே கிராமத்தை சேர்ந்த  சுந்தரமூர்த்தி, வரதராஜன், பாக்யராஜ், சதீஷ்குமார், வெங்கடேசன், ராஜீவ்காந்தி ஆகியோர் எனது மகன்கள் இல்லாத போது எனது வீட்டுக்கு வந்து மனைவி சின்னபிள்ளையை உருட்டுக்கட்டை ஆயுதங்களுடன் வந்து தகாதா வார்த்தைகளால் திட்டி எனது ஆன்டைகளை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நீ நிம்மதியா சாமி கும்பிடுற என்று சொல்லி அடித்து உள்ளனர்

இதில் காயமடைந்த எனது மனைவி சின்னப்பிள்ளை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்

மேற்படி முருகேசன் கொலை வழக்கில் தண்டனை பெற்ற வரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரிடம் பணம் வாங்கிக்கொண்டு எங்கள் குடும்பத்தை அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருத்தாசலம் சார் ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்துள்ளனர். இதில் குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

No comments

Thank you for your comments