சிகலா அரசியல் சுற்றுப் பயணம்... மீண்டும் அதிமுகவில் கிளம்பிய புயல்...
சென்னை, அக்.25-
சசிகலாவின் தென் மாவட்ட சுற்றுப் பயணம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் இந்த சுற்றுப் பயணம் மீண்டும் அதிமுகவுக்குள் புயலைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் இரண்டு நாள்கள் சசிகலா முன்னெடுத்த நிகழ்ச்சிகள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடியை கொடுத்தது. அதன்பின்னர் ஜெயக்குமார், இபிஎஸ் ஆகியோர் மோசமான வார்த்தைகளில் சசிகலாவை விமர்சிக்க தொடங்கினர். தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த போது நிம்மதி பெருமூச்சுவிட்ட அவர்கள் தற்போது மீண்டும் தங்களது எதிர்ப்பை காட்டத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி பிரிந்தபோது, எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கி ஜெயலலிதாவுக்கு வழி விட்டது போல் சசிகலாவும் தற்போதைய அதிமுக தலைமைக்கு வழிவிட்டு பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே எடப்பாடி தரப்பின் விருப்பமாக உள்ளது.
இந்த விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு சில செய்திகளும் வருகின்றன. அதாவது அதிமுகவை கைப்பற்றும் முயற்சியைவிட்டுவிட்டு அமமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கலாம் என டிடிவி தினகரன் சசிகலாவிடம் கூறியதாகவும், அதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததாகவும் ஒரு செய்தி பரவுகிறது. ஆனால் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தால் இதை முற்றிலும் மறுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆசைதான் செய்தியாக பரப்பப்படுகிறது என்கிறார்கள்.
சென்னை இரு நாள் நிகழ்ச்சிகள் அதிமுக தலைமையை அசைத்துப் பார்த்தாலும் மீடியாவில் பெரிதாக கவனம் பெறவில்லை. ஊடகங்கள் சசிகலா பயணத்தை ஒளிபரப்பு செய்த போதும், கூட்டம் அதிகம் இல்லை என்பதால் ஈர்க்கும் படியாக இல்லை. எனவே தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர்.
🔥Also Read
சசிகலாவின் சுற்றுப் பயணம் தொடங்க இன்னும் இரு நாள்களே உள்ளன. தஞ்சை பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் தினகரன் மகள் ஜெயஹரிணியின் திருமண வரவேற்பு விழா நாளை மறுநாள் (27ம் தேதி புதன்கிழமை) நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமணத்துக்கு தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள முடியாத நிலையில் தஞ்சையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
🔥Also Read
👆ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்!
தொண்டர்களை குடும்பமாக வரவேண்டும் என அழைத்துள்ள தினகரன் அறுசுவை விருந்தையும் ஏற்பாடு செய்துள்ளார். சசிகலா ஆதரவாளர்கள், அமமுக தொண்டர்கள் என புதன் கிழமை தஞ்சையில் பெரிய கூட்டத்தை கூட்டி தங்களது செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர்.
27ஆம் தேதி தஞ்சாவூர், 28ஆம் தேதி மதுரை, திருநெல்வேலி, 29ஆம் தேதி பசும்பொன் என அனைத்து இடங்களிலும் சசிகலா தொண்டர் படை சூழ வலம் வரவுள்ளார். அதன்பின்னர் என்னென்ன மாற்றங்கள் அதிமுகவுக்குள் நிகழப் போகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 24, 2021
வருகிற 27.10.2021 அன்று தஞ்சை மாவட்டம், பூண்டியில் நடைபெறவுள்ள எனது அன்பு மகளின் திருமண வரவேற்பில் தங்கள் குடும்பத்தினரோடு கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன். pic.twitter.com/HcHCz9jwIa


No comments
Thank you for your comments