Breaking News

ராஜகுளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தை அடுத்த இராஜகுளத்தில் தனது நண்பர்களுடன் குளிக்க வந்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த ஷேக் மாலிக்,மற்றும் மாலி, ஆகியோரின் மகன் ஷேக் ஷரீப் வயது(15). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜகுளத்தில் குளிக்க வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியோடு குளித்து கொண்டிருந்த அவர் தீடிரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையெடுத்து உடன் சென்ற நண்பர்கள் ஷேக் ஷரீப் நீரில் மூழ்கியதும் அதிர்ச்சியடைந்து கரைக்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். இதனையெடுத்து அப்பகுதி இளைஞர்கள் முன்வந்து நீண்ட நேரம் தேடிவந்த நிலையில் அவர் குளத்தின் அடியில் சகதியில் சிக்கி கொண்டிருந்தவரை மீட்டு கரை சேர்த்தனர். உடனடியாக 108அவசர ஊர்த்திக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து அவரை பரிசோதித்த போது ஷேக் ஷரீப் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையெடுத்து தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் சிறுவனின் சடலத்தினை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடன் குளிக்க வந்த 5 சிறுவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீச்சல் தெரியாமல் துணிச்சலுடன் ஏரி, குளம், குட்டைகளில் குளிக்க சென்றால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்வதோடு உடன் சென்றவர்கள் கைகட்டி பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு காலம் முழுவதும் குற்ற உணர்ச்சி குறுகுறுக்கும் என்பதற்கு இச்சம்பவமே ஓர் சான்று.

👆  வீடியோவை கிளிக் செய்யுங்கள்  👆

சொன்னதைச் செய்தார்களா திமுக அரசு...? 
505 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றினார்கள்? 

No comments

Thank you for your comments