கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை - 27 நபர்கள் கைது
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மதுவேட்டையில் ஈடுபட்டதில், 02.10.2021 அன்று 27 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.24,000/- மதிப்புள்ள 198 மதுபான பாட்டில்கள், ரூ.1,500 மதிப்புள்ள 15 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கள்ளத்தனமாக கள்ளச்சாராயம், மற்றும் அரசு மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments
Thank you for your comments