ஷாருக்கானின் மகன் குறிவைக்கப்பட்டுள்ளார்... மெகபூபா குற்றச்சாட்டு
ஸ்ரீநகர் :
பா.ஜ.க.வின் அடிப்படை வாக்கு வங்கியின் குரூர விருப்பங்களை திருப்தி செய்வதற்காக முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர், நீதி பரிகசிக்கப்படுகிறது.
மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேசத்தில் 4 விவசாயிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய மந்திரியின் மகன் விஷயத்தில் ஒரு உதாரணத்தை உருவாக்காமல், ஷாருக்கானின் 23 மகன் ஆர்யன் கானை மத்திய விசாரணை அமைப்புகள் குறிவைத்துள்ளன.
அவரது பெயரில் ‘கான்’ என்பது இருப்பதுதான் காரணம். பா.ஜ.க.வின் அடிப்படை வாக்கு வங்கியின் குரூர விருப்பங்களை திருப்தி செய்வதற்காக முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர், நீதி பரிகசிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
Instead of making an example out of a Union Minister’s son accused of killing four farmers, central agencies are after a 23 year old simply because his surname happens to be Khan.Travesty of justice that muslims are targeted to satiate the sadistic wishes of BJPs core vote bank.
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 11, 2021


No comments
Thank you for your comments