தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்
தமிழக ஆந்திர எல்லை ஓரங்களில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், உத்திரமேரூர் அருகே மாகரல்-வெங்கச்சேரி பகுதியில் 8 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் உத்திரமேரூர் அருகே அனுமந்தண்டலம் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நீர் நிரம்பி வழிகிறது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றில் உள்ள ஈசூர்- வள்ளிபுரம் மற்றும் வாயலுார் ஆகிய தடுப்பணைகளும் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments
Thank you for your comments