ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்
சென்னை :
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்கள் 2021 மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களில் போட்டிமிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலலிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் தங்களது தேர்தல் செலவு கணக்கு விபரங்களை அதனை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994, பிரிவு 37(4)ன்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் 3 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆக்கப்படுவார்கள் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
No comments
Thank you for your comments