கட்டுமான ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட கோரி ஆர்பாட்டம்
திருப்பூர், அக்.27-
திருப்பூர் மாவட்டம்:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட கோரி மண்டல பொறியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் சிமெண்ட், கம்பி பிவிசி பைப்புகள், மென்பொருள்கள், போன்ற கட்டுமான பொருட்களை உற்பத்தியாளர்கள் அதிக விலை இருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்தி ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து தரக்கோரி 7 மண்டலத் தலைவர் மோகன கண்ணன் அவர்களும் திருப்பூர் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் முரளி அவர்களும் மற்றும் அவர்களுடன் இணைந்து பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

No comments
Thank you for your comments