வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 1வாரத்தில் 2 முறை நில அதிர்வு - பீதியில் பொதுமக்கள்
வேலூர்:
வேலூர் குடியாத்தம் பகுதியில் ஒரே வாரத்தில் 2 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி, மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த 21ம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களில் 25ம் தேதி இரவு சுமார் 10.30 மணி அளவில் மீண்டும் தட்டப்பாறையை அடுத்த மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி, மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நில அதிர்வின்போது வீட்டில் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள், கட்டில்கள் சில அங்குலம் நகர்ந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வீதிக்கு ஓடி வந்தனர்.
ஒரே வாரத்தில் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
No comments
Thank you for your comments