Breaking News

தரைபாளம் முறையாக கட்டாததால் பாடைகட்டி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிகாடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.13-லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலம் முறையாக கட்டப்படவில்லை... 

இதுகுறித்து, பாலம் முறையாக கட்டப்படாததால், ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை  மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில்,  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் ஊராட்சி நிர்வாகத்தை  கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் பாலத்தின் அருகில் பாடைகட்டி ஒப்பாரி வைத்து  ஆர்ப்பாட்டம் செய்தனர்... 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

No comments

Thank you for your comments