சுயேட்சை வேட்பாளர் பிரேமா ரஞ்சித்குமாருக்கு உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித் குமாரின் மனைவி பிரேமா ரஞ்சித்குமார் தென்னை மர சின்னத்திற்கு முத்தியால்பேட்டை ஊராட்சியில் 7வது வார்டு செல்லியம்மன் நகர்,ஏர்வாய்,மீனாட்சி நகர்,முத்தியால்பேட்டை மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரேமா ரஞ்சித் குமார் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்பாளர் பிரேமா ரஞ்சித் குமார் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக ஆர்த்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?
உடன் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பி.அன்பழகன் பூட்டு சாவி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றியக்குழு கவுன்சிலர் ஆர்.வி. ரஞ்சித் குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

No comments
Thank you for your comments