Breaking News

சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை:

சட்டசபை இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு பெற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த பட்ஜெட் மீதான விவாதம் 2 நாட்கள் நடந்தன. அதன்பிறகு துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது. 

இந்த நிலையில் இன்று போலீஸ் மானிய கோரிக்கைக்கான பதில் உரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்தினார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு பெற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உள்பட மொத்தம் 20 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

 சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்  அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.


No comments

Thank you for your comments