9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
சென்னை:
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக (அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதி) நடைபெற இருக்கிறது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையில் போட்டியிடுவார்கள். தி.மு.க. இந்த இரண்டு பதவிக்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. இன்று இரவு 6.45 மணியளவில் வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கிய நிலையில் 22ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை 23ம் தேதி நடைபெறுகிறது. 25ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி நாளாகும்.

No comments
Thank you for your comments